ஆரம்பமானது ஐபிஎல் திருவிழா; சென்னை வந்த ஆர்.சி.பி வீரர்கள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!
ஐபிஎல் 2024 சிசனின் முதல் போட்டியில் கலந்து கொள்ள ஆர்.சி.பி. வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்.
ஐபிஎல் திருவிழா
நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் நாளை (மார்ச் 22) முதல் நடைபெறவுள்ளன. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதுவரை போட்டியில் ஐந்து முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியும், இந்த முறையாவது கோப்பையை வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.
சென்னையில் வீரர்கள்
இந்த போட்டியில் விளையாடும் சிஎஸ்கே அணியின் கேப்டன் டோனி கடந்த 5-ம் தேதி சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சென்னை வந்தடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நேற்று காலை சென்னை வந்தடைந்தனர்.
அந்த அணியின் கேப்டனான விராட் கோலியை அவரது ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் காலையிலேயே விமான நிலையத்தில் வரவேற்றனர்.