புனித் ராஜ்குமார் மனைவி தான் RCB தோல்விக்கு காரணமா..? கமிஷனருக்கு வந்த புகார்
16 ஆண்டுகளாக கோப்பைக்காக காத்திருக்கின்றது ராயல் சேலஞ்சர்ஸ் அணி.
ராயல் சேலஞ்சர்ஸ் அணி
நட்சத்திர வீரர்கள், பெரும் ரசிகர் பட்டாளம் என மும்பை, சென்னை அணிகளை போல இருந்தாலும், இதுவரை ஒரு முறை கூட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்றதில்லை .
பல முறை அணியின் பெயர் மாற்றம், பல கேப்டன்கள், புதுப்புது சீருடைகள் என என்னென்னமோ செய்து பார்த்தும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.
ஆனாலும் ரசிகர்கள் அந்த அணிக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இது விளையாடியுள்ள 4 போட்டிகளில் 1'இல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது பெங்களூரு அணி.
கணவரை இழந்த....
சென்ற ஆண்டு வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்று இருந்த அந்த அணி இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என் பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பை கர்நாடகாவை சேர்ந்த பல சினிமா துறை நட்சத்திரங்கள் வெளியிட்டனர்.
இந்த சூழலில் தான் புனித் ராஜ்குமாரின் மனைவி RCB unboxing'இல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் தான், அந்த அணி தோற்று வருவதாக சமூகவலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இப்பதிவில், சுப நிகழ்ச்சிக்கு கணவரை இழந்த அஸ்னிவி புனித் ராஜ்குமார் கலந்து கொண்டதே காரணமாக குறிப்பிடப்பட்டது.
இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த பெங்களுரு பெங்களூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. ஆனால், முன்னதாகவே அப்பதிவு டெலீட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.