ஏடிஎம்களில் ரூ.500 நோட்டுகள் நிறுத்தம்? ரிசர்வ் வங்கி முக்கிய தகவல்

India Money Reserve Bank of India
By Sumathi Jun 04, 2025 10:11 AM GMT
Report

ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

ரூ.500 நோட்டு நிறுத்தம்?

அனைத்து வங்கிகளும் செப்டம்பர் மாத இறுதிக்குள் ஏடிஎம்களில் இருந்து ரூ.500 நோட்டுகளை வழங்குவதை நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி கூறியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

rs 500 notes

மேலும், ஏடிஎம்களில் ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கையை முதலில் 75% ஆகவும், பின்னர் மார்ச் 31, 2026ம் ஆண்டுக்குள் 90% ஆகவும் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இது மக்களிடையே பரபரப்பு நிலவி, குழப்பம் ஏற்பட்டது.

இனி பாஸ்போர்ட்டுக்கு இந்த சான்றிதழ் கட்டாயமில்லை - அவசியம் தெரிஞ்சுக்கோங்க

இனி பாஸ்போர்ட்டுக்கு இந்த சான்றிதழ் கட்டாயமில்லை - அவசியம் தெரிஞ்சுக்கோங்க

உண்மை என்ன

இந்நிலையில், ரூ.100 மற்றும் ரூ.200 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து, இந்த ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்களில் இருந்து அடிக்கடி வழங்கப்பட்டால், புழக்கத்தில் உள்ள ரூ.500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.

இருப்பினும், ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான எந்தவொரு திட்டத்தையும் ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஆகையால் மக்கள் குழப்பமடைய தேவையில்லை. வழக்கம் போல் 500 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.