சிறையில் கணவருக்காக அந்த வசதியை கேட்ட மகாலெட்சுமி - என்ன சொன்னாங்க தெரியுமா?

Ravinder Chandrasekar Mahalakshmi
By Sumathi Sep 17, 2023 09:42 AM GMT
Report

மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் சந்திரசேகருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

ரவீந்தர் கைது

லிப்ரோ என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர் ரவீந்தர் சந்திரசேகர் (39). நட்புனா என்னானு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற தமிழ் படங்களை தயாரித்துள்ளார்.

சிறையில் கணவருக்காக அந்த வசதியை கேட்ட மகாலெட்சுமி - என்ன சொன்னாங்க தெரியுமா? | Ravindar Chandrasekaran Bail Petition Mahalakshmi

கடந்த ஆண்டு பிரபல சீரியல் நடிகை மகாலெட்சுமியை காதலித்து 2வது திருமணம் செய்துக்கொண்டார். அன்றிலிருந்து இருவரும் ஹாட் டாப்பிக்கில் இருந்து வருகின்றனர். இருவரும் தங்களின் முதலாமாண்டு திருமண நாளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் கொண்டாடினர்.

போராடும் மகாலெட்சுமி

இந்நிலையில், சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி 16 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக அளித்த புகாரில் கைது செய்யப்பட்டார்.

சிறையில் கணவருக்காக அந்த வசதியை கேட்ட மகாலெட்சுமி - என்ன சொன்னாங்க தெரியுமா? | Ravindar Chandrasekaran Bail Petition Mahalakshmi

இந்நிலையில், மகாலெட்சுமி ஜாமீன் வழங்கக் கோரியும், சிறையில் ஏ கிளாஸ் வசதிகள் வழங்க வேண்டும் என்றும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரேவதி, ஜாமீன் மனுவையும், ஏ கிளாஸ் சிறை மனுவையும் தள்ளுபடி செய்தார். அவரை வெளியே விட்டால் சாட்சிகளை அழிக்கக் கூடும் என மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வாதம் செய்தது குறிப்பிடத்தக்கது.