ரேசன் கார்டு வைத்திருப்போர் இனி அலைய வேண்டாம் - வெளியான முக்கிய தகவல்

Government of Tamil Nadu
By Thahir Apr 28, 2023 05:33 AM GMT
Report

ரேசன் அட்டைதாரர்கள் இனி அலைய வேண்டிய அவசியம் தேவை இருக்காது என்று இந்த அறிவிப்பு உணர்த்துகிறது.

ரேசன் கடைகளில் இனி இதுவும் கிடைக்கும்

நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி பேரிடர் காலங்களில் நிவாரண உதவி மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

Ration card holders don

இந்த நிலையில் தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் நேற்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

அதுமட்டுமில்லாமல் ஆவலுடன் சேர்ந்து கூட்டுறவுத்துறை சார்பில் புதிய ஆவின் மையங்கள் திறக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.