சிக்கன் கிரேவியில் கறிக்கு பதில் எலி கிடந்ததால் அதிர்ச்சி - வைரலாகும் வீடியோ!
லூதியானாவில் உணவகம் ஒன்றில் சிக்கன் கிரேவியில் எலி சேது கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உணவகம்
பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் பிரகாஷ் தாபா என்ற பிரபலமான உணவகம் உள்ளது. இங்கு குடும்பத்துடன் ஒருவர் சாப்பிட சென்றுள்ளார். அப்பொழுது அவர்கள் சிக்கன் கிரேவி ஆர்டர் செய்துள்ளனர், அதனை பரிமாறியபொழுது அதில் எலி ஒன்று இறந்து கிடந்துள்ளது.
அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த குடும்பத்தினர் இதனை வீடியோ எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
கோரிக்கை
இந்நிலையில், இது குறித்த வீடியோ சமூக வலைத்தலங்ளில் பரவி வந்த நிலையில் இந்த உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
Parkash dhaba Ludhiana. India Serve rat in chicken curry. Restaurant owner bribe the food inspector and go free??? Very poor standards in Kitchen of many Indian restaurants. Be aware . pic.twitter.com/chIV59tbq5
— NC (@NrIndiapolo) July 3, 2023
ஆனால் உணவகத்தில் உரிமையாளர் அவ்வாறு எந்த ஒரு தவறும் நடக்கவில்லை எனவும் தனது உணவகத்திற்கு கெட்ட பெயர் வரவழைக்கும் விதமாக இவ்வாறு நடந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது அந்த ஹோட்டலில் உணவு சாப்பிட்ட நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.