பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு : 3 பேர் உயிரிழப்பு
court
bombblast
punjabcourt
By Irumporai
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் 3வது தளத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகந்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பு சம்பத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
லூதியானா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவறையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மேலும், காயம் அடைந்தவர்களில் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.