நடிப்பு'னு வந்துட்டா இப்படி தான...ஆனா அந்த சீன்க்கு அப்புறம்....ரொம்ப அழுதேன்!! ரஷ்மிகா வேதனை..!

Rashmika Mandanna Ranbir Kapoor
By Karthick Jan 20, 2024 07:31 AM GMT
Report

அனிமல் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸ் வசூல் மிக சிறப்பாகவே அமைந்தது.

அனிமல்

ரன்பிர் கபூர், ரஷ்மிகா, அனில் கபூர் என பலர் நடிப்பில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய "அனிமல்" படம் ஆணாதிக்க சிந்தனைக்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை எட்டியது.

rashmika-cried-after-shooting-a-scene-in-animal

கிட்டத்தட்ட ரூ. 900 கோடி மேல் அப்படம் வசூலித்ததாக கூறப்படுகிறது. ரன்பிர் கபூரின் அசுரத்தனமான நடிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்தது. விமர்சனங்கள் ஒரு புறம் இருந்தாலும், படத்தின் அடுத்த பாகம் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த காட்சி

இந்த படத்தில் ரஷ்மிகா நிறைய ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருந்தார். படத்தில் காட்சி ஒன்றில் ரஷ்மிகா ரன்பிரை அரைவது போல காட்சி இடம்பெற்றிருக்கும், அந்த காட்சி குறித்து அண்மையில் பேசிய அவர், முழு காட்சியும் ஒரு முறை எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு, அந்த காட்சியை தன்னால் சரியாக யூகிக்க முடியவில்லை என்றார்.

அவர் தான் காதலர் - பளிச்சென சொன்ன ரஷ்மிகா மந்தனா..!

அவர் தான் காதலர் - பளிச்சென சொன்ன ரஷ்மிகா மந்தனா..!

நான் எப்படி இக்காட்சியினை நடிக்க போகிறேன் என்று யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில், இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பவர் எப்படி உணருவார் என்று இயக்குனர் சந்தீப் கூறிய நிலையில், அதனை கொண்டு தான் காட்சியில் நடித்ததாக தெரிவித்தார்.

rashmika-cried-after-shooting-a-scene-in-animal

ஷூட்டிங்கிற்கு பிறகு நான் நிஜமாகவே அழுதேன் என வேதனையுடன் பகிர்ந்து ரஷ்மிகா, ரன்பிர் கபூரை அறைந்த நிலையில், ரன்பீரிடம், 'அது சரியா? நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா?' என்று கேட்டதாகவும் கூறினார். ஒரு நடிகராக இப்படி தான் என்றும் நடிப்பின் உச்சம் என்ன என்பதை அந்த நிமிடத்தில் உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.