பாலியல் வன்கொடுமை கொடூரம் - ரோட்டில் கிடந்த பெண்ணின் தலை இல்லா நிர்வாண உடல்!

Sexual harassment Uttar Pradesh India Crime
By Swetha Sep 12, 2024 01:30 PM GMT
Report

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட பெண்ணின் உடல் ரோட்டில் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

நிர்வாண உடல்

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள குஜைனி பகுதியில், ஒரு தலையில்லாத பெண்ணின் உடல் நிர்வாணமாக சாலையில் கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றினர்.

பாலியல் வன்கொடுமை கொடூரம் - ரோட்டில் கிடந்த பெண்ணின் தலை இல்லா நிர்வாண உடல்! | Raped Womans Naked Body Found Headless On Road

இந்த நிலையில், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தலையை துண்டித்து கொன்றுவிட்டு நிர்வாண நிலையில் உடலை சாலையில் வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடந்தினர்.

அப்போது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் நெடுஞ்சாலையின் மறுபுறத்தில் உள்ள மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில், உடல் கிடந்த இடம் அருகே ஒரு பெண் நடந்து செல்வது பதிவாகி இருந்தது.

மயக்க மருந்து; இளம்பெண் பாலியல் வன்கொடுமை - சினிமா தயாரிப்பாளரின் வெறிச்செயல்!

மயக்க மருந்து; இளம்பெண் பாலியல் வன்கொடுமை - சினிமா தயாரிப்பாளரின் வெறிச்செயல்!

கொடூர சம்பவம்

அவர் சாம்பல் நிற கால்சட்டை அணிந்திருந்தார். அதேபோல பெண் உடல் அருகே சாம்பல் நிற ஆடை துண்டு இருந்தன. இது குறித்து பேசிய போலீசார், உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை.

பாலியல் வன்கொடுமை கொடூரம் - ரோட்டில் கிடந்த பெண்ணின் தலை இல்லா நிர்வாண உடல்! | Raped Womans Naked Body Found Headless On Road

ஆனால் சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள கேமராவில் பெண் ஒருவர் தனியாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அந்த பெண் அணிந்திருந்த உடைகள், நெடுஞ்சாலையில் பெண் உடல் அருகே கைப்பற்றப்பட்ட துணி மற்றும் செருப்புகளுடன் ஒத்துப்போகின்றன என்றனர்.

இந்த சூழலில், கேமராவில் பதிவான பெண் பற்றி அப்பகுதி மக்களிடம் விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.