என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள் - வேதனை தெரிவித்த பிரபல நடிகர்!

Bollywood Ranveer Singh
By Sumathi Nov 22, 2022 07:30 PM GMT
Report

தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை ரன்வீர் சிங் பகிர்ந்துள்ளார்.

ரன்வீர் சிங் 

2010ம் ஆண்டு இந்தி திரையுலகில் அறிமுகமானவர்தான் நடிகர் ரன்வீர் சிங். இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றி கொடுத்ததால் முன்னணி நடிகராக உயர்ந்து பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக தனது அந்தஸ்தை உயர்த்தினார்.

என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள் - வேதனை தெரிவித்த பிரபல நடிகர்! | Ranveer Singh Opens Up About Casting Experience

பாலிவுட்டில் பிரபல நடிகையான தீபிகா படுகோனை திருமணம் செய்து கொண்டார் ரன்வீர் சிங். இவர் அணியும் ஆடையும், ஸ்டைலும், தோற்றமும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். இந்நிலையில், மும்பையில், Marrakech சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அதில் பேசிய ரன்வீர்,

கடின உழைப்பாளி

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவுடன் திரைத்துறையில் நுழைந்தேன், அப்போது வருமானத்திற்காக கிடைத்த வேலைகளை செய்தேன். சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் இருந்து வருவது உண்மைதான். இது நடிகைகளுக்கு மட்டும் இல்லை நடிகர்களுக்கும் இருக்கு, அப்படி ஒரு அசிங்கமான ஓர் அனுபவத்தை நான் சந்தித்து இருக்கிறேன்.

என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள் - வேதனை தெரிவித்த பிரபல நடிகர்! | Ranveer Singh Opens Up About Casting Experience

ஒரு தயாரிப்பாளர் சந்திக்க அவர் வீட்டுக்கு சென்றேன் அப்போது அவர், நாயை கட்டவிழ்த்து விட்டு வேடிக்கை பார்த்தார். அதே போல மற்றொரு நபர் இருட்டான இடத்திற்கு என்னை அழைத்து படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறினார். அது மட்டுமில்லாமல், அந்த நபர், நீங்கள் ஒரு கடின உழைப்பாளியா? இல்லை புத்திசாலித்தனமான தொழிலாளியா? என்று கேட்டார்.

அப்போது நான், ஒரு கடின உழைப்பாளி என்றேன். இதே போல பல அவமானங்களையும், அசிங்கங்களையும் நான் சந்தித்து இருக்கிறன். பல விரும்பத்தகாத அனுபவங்கள் தான் என்னை ஒரு திறமையான நடிகராக ஆக்கி உங்கள் முன் நிற்கவைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.