தேமுதிகவுக்கு பச்சைக்கொடி காட்டிய எடப்பாடி - ராஜ்யசபா செல்கிறார் LK சுதீஷ்
தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தர அதிமுக ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலங்களவை சீட்
தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. திமுகவில் 4 மாநிலங்களவை உறுப்பினர் பதவி
வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இதற்கிடையில், அதிமுக, தேமுதிக கூட்டணி வைத்த நிலையில் மாநிலங்களவை சீட் தருவதாக
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
தேமுதிகவுக்கு உறுதி
ஆனால், தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுப்பது குறித்து எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இந்நிலையில், தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.
தொடர்ந்து தேமுதிகவுக்கு சீட் வழங்குவது குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவித்து விட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, தேமுதிகவுக்கு ஒரு சீட் வழங்கப்படுவது உறுதி எனும் தகவல் வெளியாகியுள்ளது.