பயங்கரமா குடிப்பாரு, அடிப்பாரு; அதை கேட்டு டார்ச்சர் பண்ணுவாரு - ராஜ்கிரண் வளர்ப்பு மகள் கண்ணீர்!

Tamil TV Serials
By Sumathi Feb 05, 2024 08:27 AM GMT
Report

ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா, கணவர் குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

முனீஸ் திருமணம்

சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் முனீஸ் ராஜா. இவருக்கும், நடிகர் ராஜ்கிரனின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியாவுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துக் கொண்டனர். இதனை ராஜ்கிரண் ஏற்றுக்கொள்ளவில்லை.

rajkiran daughter issue

சின்னத்திரை நடிகர் என்னுடைய பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். எனவே என்னுடைய பெயரை எந்த இடத்திலும் அவர்கள் பயன்படுத்தக் கூடாது என ராஜ்கிரண் கேட்டுக்கொண்டிருந்தார்.

பிரியா பேட்டி

இதனையடுத்து வீடியோ ஒன்றில் பிரியா நான் 2022ம் ஆண்டு முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டேன். அந்த கல்யாணத்திற்கு பிறகு, நாங்கள் தற்போது தனித்தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனக் கூறி பரபரப்பை கிளப்பினார்.

பயங்கரமா குடிப்பாரு, அடிப்பாரு; அதை கேட்டு டார்ச்சர் பண்ணுவாரு - ராஜ்கிரண் வளர்ப்பு மகள் கண்ணீர்! | Rajkirans Daughter Priya About Husband

இந்நிலையில், அண்மையில் இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், திருமணமான முதல் மாதத்தில் இருந்தே எனக்கும் அவருக்கும் பிரச்சனை ஆரம்பித்து விட்டது. முனிஸ் ராஜா, பயங்கரமா குடிப்பாரு, குடித்துவிட்டு அடிப்பார், கண்டபடி பேசுவார். காலையில் விடிந்ததும் எதுவுமே அவருக்கு நினைவு இருக்காது இயல்பா இருப்பாரு.

அந்த சீரியல் நடிகர் பணத்துக்காக எதையும் செய்பவன் : நடிகர் ராஜ்கிரண்  பதிவால் பரபரப்பு

அந்த சீரியல் நடிகர் பணத்துக்காக எதையும் செய்பவன் : நடிகர் ராஜ்கிரண் பதிவால் பரபரப்பு

இந்த குடிப்பழக்கத்தை மாற்ற முடியும் என்று நம்பினேன். ஆனால், முடியவில்லை. இதுமட்டுமில்லாமல் பணம் கேட்டு எனக்கு தொல்லை கொடுத்தார். அந்த நேரத்தில் எனக்கு யாரிடம் சென்று பணம் கேட்பது என்று தெரியவில்லை. இருந்தாலும் என் கணவருக்காக எனக்கு தெரிந்த நண்பர்கள் மூலம் பணம் வாங்கி கொடுத்தேன் இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது.

அதை நான் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன். நீ வீட்டைவிட்டு போனா உன் குடும்பத்தையே வெட்டுவேன் என்று பல முறை மிரட்டி இருக்கிறார். இது எல்லா பிரச்சனையும் சேர்ந்து நான் மிகுந்த மனஅழுத்தத்திற்கு சென்றதால், மருத்துவமனைக்கு சென்று மருந்து எடுத்துக்கொண்டேன். என் அப்பா அவ்ளோ சொல்லியும் நான் கேக்கல என வேதனை பகிர்ந்துள்ளார்.