என் வலி ராஜ்கிரணுக்கு தெரியுமா? - சீமான் சரமாரி கேள்வி

Rajkiran Seeman
By Thahir Aug 02, 2023 09:40 PM GMT
Report

முகநூலில் தன்னை விமர்சித்து பதிவிட்ட நடிகர் ராஜ்கிரணுக்கு, செய்தியாளர்கள் சந்திப்பில் நாம் தமிழர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை வள்ளுவர் கூட்டத்தில் மணிப்பூரில் குக்கி இன மக்களுக்கு நடக்கும் அநீதிகளை கண்டித்து நாம் தமிழர் சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பின் பேசிய சீமான், இஸ்லாமியவர்களையும், கிறிஸ்தவர்களையும் சாத்தான்களின் குழந்தை என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

என் வலி ராஜ்கிரணுக்கு தெரியுமா? - சீமான் சரமாரி கேள்வி | Does Rajkiran Know My Pain Seaman

இதற்கு நடிகர் ராஜ்கிரண் கண்டனம் தெரிவித்து தனது முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

ராஜ்கிரண் மட்டுமின்றி பல்வேறு தரப்பில் இருந்தும் இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

ராஜ்கிரணின் பதிவு வைரலான நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அநீதிக்கு எதிராக உருவாக்கப்பட்ட மார்கங்களே இஸ்லாமியமும், கிறிஸ்துவமும் என குறிப்பிட்ட சீமான், ஒருமுறையாவது அவர்கள் அநீதிக்கு எதிராக போராடியது உண்டா என அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இஸ்லாமியர்களை அவமதித்ததாக கூறும் நிலையில், தான் மன்னிப்பு கேட்டால் மட்டும் அவர்கள் தனக்கு ஓட்டு போட்டுவிடுவார்களா? என கேள்வி எழுப்பினார்.

மேலும் ராஜ்கிரண் குறித்து பேசிய சீமான், இஸ்லாமியர்களுக்காக ராஜ்கிரண் எத்தனை போராட்டங்களில் பங்கெடுத்துள்ளார் என்றும் வினவி, தன்னுடைய வலி ராஜ்கிரணுக்கு தெரியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.