அப்பா ப்ளீஸ்... அரசியல் வேணாம்ப்பா... ரஜினி அரசியலை விட்டு விலகுவதற்கு மகள்கள் தான் காரணமா?

politics rajiny party
By Jon Dec 29, 2020 06:03 PM GMT
Report

நடிகர் ரஜினி அரசியலை விட்டு விலக அவருடைய மகள்கள் தான் முக்கிய காரணம் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிசம்பர் 31-ம் தேதி கட்சி தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இதனால் எப்போது 31-ம் தேதி வரும், ரஜினியின் கட்சி பெயர், சின்னம் எப்படியெல்லாம் இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பலரும் எதிர்பார்ப்போடு காத்திருந்தார்கள். ஆனால் ரஜினியோ சில நிமிடங்களுக்கு முன்னர், அரசியலிலிருந்து முழுவதுமாக விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அவரின் இந்த அறிவிப்பு ஒரு சிலருக்கு அதிர்ச்சியாகவும், குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. ஏனெனில் ரஜினிக்கு எந்த ஒரு மன அழுத்தம் ஏற்படக்கூடாது. ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளதால் எந்த நோயேனும் ஈஸியாக பரவிவிடும். அப்படி பரவிவிட்டால் பெரிய ஆபத்தை தந்துவிடும். இந்த சமயத்தில், அரசியல் குறித்து அதிகமாக யோசிப்பதால் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்படும்.

அதனால் இப்போதைக்கு அரசியல் வேண்டாமே, கட்சிப்பணிகளுக்காக கூட வெளியே எங்கேயும் போக வேண்டாம் என்று ரஜினியின் மகள்கள் கெஞ்சி கூறியிருக்கிறார்கள். மகள்கள் மற்றும் குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்கு பின்னரே ரஜினி இப்படி ஒரு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ரஜினி ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கு படப்பிடிப்பு தளத்தில் சிலருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து, ரஜினியும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், ஹைதராபாத்தில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.