ரஜினியின் நலம் விசாரித்த முதல்வர் மற்றும் துணை முதல்வர்

#rajiny #pannerselvam #hospital
By Jon Dec 26, 2020 11:26 AM GMT
Report

நடிகர் ரஜினிகாந்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமிமற்றும் துணை முதலவர் பன்னீர் செல்வம் ஆகியோர் நலம் விசாரித்தனர்.

அண்ணாத்த படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா உறுதியானதால் படப்பிடிப்பை ரத்து செய்து,ரஜினிகாந்த் ஹைதராபாத்திலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

அவருக்கு கொரோனா இல்லை என முடிவு வந்தது. ஆனால் ரத்த அழுத்தம் காரணமாக ரஜினிகாந்த் நேற்று ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது இந்த நிலையில் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்திடம் தொலைபேசி மூலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்.

ரஜினிகாந்த் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அதே போல் துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ரஜினிகாந்த் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.