ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ்?-மருத்துவமனை வெளியிட்ட தகவல்!

#india #cinema #rajiny
By Jon Dec 26, 2020 11:21 AM GMT
Report

நடிகர் ரஜினிகாந்தினை எப்போது டிஸ்சார்ஜ் செய்வது என்பது பற்றி இன்று மாலைக்குள் முடிவு எடுக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  நடிகர் ரஜினியின் உடலில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும். அவரின் ரத்த அழுத்தம் நேற்றை விட முன்னேற்றம் இருந்தாலும் ,ரத்த அழுத்தம் சற்று அதிகமாகவே இருப்பதாக தெரிவித்துள்ளது ரஜினிகாந்தின் ரத்த அழுத்தத்தை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ரத்த அழுத்தம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் முழு ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஓய்வு தேவை என்பதால் அவரை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை.

என தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம். மருத்துவ பரிசோதனைகளில் கவலை படும் அளவுக்கு எதுவும் இல்லை எனவும், ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் குறித்து இன்று மாலை முடிவு எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாத்த படப்பிடிப்பிற்காக கடந்த டிசம்பர் 14 அன்று , ஹைதராபாத் வந்த ரஜினிகாந்த்,அங்கு 4 பேருக்கு கொரோனா உறுதியானதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ரஜினிக்கு கொரோனா இல்லை என முடிவு வந்தாலும் அவர் ஐதராபாத்தில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

இந்த நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரத்த அழுத்தம் காரணமாக அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.