அரசியல் வேண்டாம் என்று ரஜினி எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன்- சீமான்

rajami seeman political
By Jon Dec 30, 2020 11:26 PM GMT
Report

டிசம்பர் 31 ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றுக்கூறிய ரஜினிகாந்த் உடல்நிலையை காரணம் காட்டி தற்போது ’கட்சி தொடங்கவில்லை.

அரசியலுக்கு வரமுடியவில்லை. என்னை மன்னியுங்கள்’ என்று உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த முடிவுக்கு அரசியல்வாதிகள் பல தரப்பினரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“இந்திய திரையுலகின் சிறந்த திரைக்கலைஞர் ஐயா ரஜினிகாந்த் அவர்கள் , தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன்.

அவர் முழு உடல்நலம் பெற்று, கலையுலகப் பயணத்தைத் தொடர எனது வாழ்த்துகளையும், பேரன்பையும் தெரிவிக்கின்றேன்” என்று வாழ்த்துகளோடு ரஜினியின் முடிவை வரவேற்றுள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்ததில் இருந்து அவரை சீமான் கடுமையாக விமர்சித்து வந்தார்.