4 முறை கண்ணத்தில் அறைந்தார் - நியூசி ஸ்டார் வீரர் பகீர் குற்றச்சாட்டு!

Rajasthan Royals Cricket
By Sumathi Aug 14, 2022 07:45 AM GMT
Report

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் கண்னத்தில் அறைந்ததாக ராஸ் டெய்லர் கூறிய தகவல் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஸ் டெய்லர் 

நியுசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் 2007ம் ஆண்டு முதல் கிரிக்கெட் விளையாடி வருகிறார். கடந்த 2008 முதல் 2014 வரை ஐபிஎல் போட்டிகளிலும் கலந்துகொண்டுள்ளார்.

4 முறை கண்ணத்தில் அறைந்தார் - நியூசி ஸ்டார் வீரர் பகீர் குற்றச்சாட்டு! | Rajasthan Owner Slapped Me Former Player Accuses

கடந்த ஏப்ரல் மாதம் ராஸ் டெய்லர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, சமீபத்தில் அவரது சுயசரிதைப் புத்தகம் வெளியாகியது. பிளாக் அண்ட் ஒயிட் என்ற பெயரில் வெளியான அந்த புத்தகத்தில் தனது கிரிக்கெட் அனுபவங்களைப் பகிர்ந்திருந்திருந்தார்.

 ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர்

அதில், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற போது நடந்த கசப்பான சம்பவத்தை பற்றியும் கூறியுள்ளார். இது கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறது. "அந்தப் போட்டியில் நான் டக் அவுட் ஆனபோது

4 முறை கண்ணத்தில் அறைந்தார் - நியூசி ஸ்டார் வீரர் பகீர் குற்றச்சாட்டு! | Rajasthan Owner Slapped Me Former Player Accuses

'டக் அவுட் ஆவதற்கு நாங்கள் உங்களுக்கு ஒரு மில்லியன் கொடுக்கவில்லை' என்று கூறி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் என் முகத்தில் நான்கு முறை அறைந்தார். அவர் அறைந்தது கடினமாக இல்லை.

மேலும், முழுக்க முழுக்க விளையாட்டுக்காக இது என்பதும் என்னால் சொல்ல முடியவில்லை. எனினும், தொழில்முறை விளையாட்டு சூழல்களில் இதுபோன்று நடந்ததை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை" என்று தனது சுயசரிதையில் கூறியுள்ளார் ராஸ் டெய்லர்.