பிரபல நடிகைகளை வைத்து 5 ஸ்டார் ஹோட்டலில் ஆபாச படம்.. ஓடிடிக்கு விற்பனை!
5 ஸ்டார் ஹோட்டலில் ராஜ் குந்த்ரா ஆபாச படத்தை ஷூட் செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ராஜ் குந்த்ரா
பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவரான தொழிலதிபர் ராஜ் குந்த்ரா ஆபாச படம் எடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அதன்பின் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், ராஜ் குந்த்ரா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், நடிகைகள் ஷெர்லின் சோப்ரா, பூனம் பாண்டே, பட தயாரிப்பாளர் மீத்தா ஜுன்ஜூன்வாலா, கேமராமேன் ராஜூ துபே ஆகியோருடன் சேர்ந்து மும்பையில் இருக்கும் இரண்டு 5 ஸ்டார் ஹோட்டல்களில் ஆபாச படங்களை ஷூட் செய்தார் ராஜ் குந்த்ரா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபாச படம்
மேலும், ஓடிடியில் வெளியிடும் எண்னத்தில் தான் ஆபாச படங்களை எடுத்தார் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மாத் தீவில் இருக்கும் பங்களா ஒன்றில் நடந்த அதிரடி ரெய்டுக்கு பிறகே ராஜ் குந்த்ரா ஆபாச படங்கள் எடுப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து, பூனம் பாண்டே, தி பூனம் பாண்டே என்கிற மொபைல் ஆப்பை உருவாக்கி வந்தார். அதை ராஜ் குந்த்ராவின் நிறுவனம் மூலம் விநியோகம் செய்ய திட்டமிட்டார் எனக் கூறப்பட்டுள்ளது.