கடைசி நேரத்தில் வந்த சோதனை.. தெப்பக்குளமாக மாறிய பாரத் மண்டபம் - வைரலாகும் வீடியோ!
G20 மாநாடு நடந்த பாரத் மண்டபம் தண்ணீரால் நிரம்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநாடு
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் நேற்றும், இன்றும் 18வது ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உலக தலைவர்கள் பலர் டெல்லியில் குவிந்துள்ளனர். ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.
மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்த சர்வதேச தலைவர்களுக்குப் புகழ்பெற்ற கோனார்க் சக்கரம் பின்னணியில் இருக்கும்படி சிவப்புக் கம்பளத்தில் நின்று பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு அளித்தார்.
இந்த மாநாட்டில் நாட்டின் பெயரைக் குறிக்க பிரதமர் மோடியின் முன்பாக வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையில் இந்தியா என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ என இடம்பெற்றது.
வைரல் வீடியோ
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தில் மழைநீரால் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.
खोखले विकास की पोल खुल गई
— Congress (@INCIndia) September 10, 2023
G20 के लिए भारत मंडपम तैयार किया गया। 2,700 करोड़ रुपए लगा दिए गए।
एक बारिश में पानी फिर गया... pic.twitter.com/jBaEZcOiv2
மேலும், அதில் "G20 மாநாட்டிற்காக ரூ.2700 கோடி முதலீடு செய்து கட்டப்பட்ட மண்டபம், இங்கு ஒரே மழையில் தண்ணீர் புகுந்து விட்டது" என்று பதிவிட்டுள்ளார். இது தற்பொழுது பேசுபொருளாகி வருகிறது.