அடுத்த 5 தினங்களுக்கு கொட்டப்போகும் மழை...இந்த 4 மாவட்டங்களுக்கு ஹாப்பி நியூஸ்!
4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4 மாவட்டங்கள்
அதிகமான வெப்பம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் மக்களை கடுமையாக வாட்டி வதைத்து இருக்கிறது. இந்த சூழலில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதன்படி இன்று தமிழகத்தில், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஹாப்பி நியூஸ்
அதுமட்டும்மல்லாமல் 13.06.2024 முதல் 17.06.2024 வரை புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை அதாவது, 11.06.2024 முதல் 15.06.2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை 2° - 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர்.