இப்படி செய்ததற்கு மோடி மன்னிப்பு கேட்டாக வேண்டும் - ராகுல் காந்தி உறுதி
பிரஜ்வல் ரேவண்ணா மீதான குற்றச்சாட்டு இந்திய அரசியல் களத்தில் எதிரொலித்து வருகின்றது.
ரேவண்ணா வழக்கு
முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரதத்தின் மீது விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழுவின் விசாரணையில் இந்த விவகாரம் குறித்து பாஜக தலைமையிடத்திற்கு கட்சியின் கர்நாடகாவை சேர்ந்த பாஜக மூத்த நிர்வாகி கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் விஷயம் தெரிந்தும் எவ்வாறு பிரதமர் மோடி அவருக்காக பிரச்சாரம் மேற்கொண்டார் என பல அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை எதிர்கட்சியினர் மோடி மீது வைத்து வருகிறார்கள்.
மன்னிப்பு கேட்கவேண்டும்
இந்த சூழலில், கர்நாடக மாநில சிவமோகா தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கீதா சிவராஜ்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் ராகுல் காந்தி.
அப்போது அவர் பேசும் போது, பாஜகவின் கூட்டணியில் இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, பெரிய குற்றம் செய்த அவருக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார் என சாடினார்.
இதற்காக, பெண்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிரடியாக கூறிய ராகுல் காந்தி, காங்கிரஸ் அரசு, பெண்களுக்கு நீதி கிடைக்க செய்வதற்காக சிறப்பு விசாரணை குழு அமைத்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

கண்ணாடியை திறந்ததும் அசுர வேகத்தில் தாக்கிய Eastern Indigo Snake... பதறவைக்கும் வைரல் காணொளி! Manithan

இந்தியாவில் தேனிலவிற்கு சென்றவேளை கொடூரம் : கூலிப்படையை வைத்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி IBC Tamil
