பெண்களுக்கு மாதம் ரூ. 4000 வழங்கப்படும் - ராகுல் காந்தி வாக்குறுதி!
ராகுல் காந்தி பெண்களுக்கு ரூ. 4000 வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கியுள்ளார்.
தேர்தல்
தெலுங்கானா மாநிலத்தில் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தெலுங்கானாவில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்,
அப்பொழுது அங்கு காலேஸ்வரம் லிப்ட் பாசனத் திட்டத்தை ஆய்வு செய்தார். மேலும், இவர் பல வாக்குறுதிகள் மற்றும் சலுகைகளை வழங்கியுள்ளார்.
வாக்குறுதி
இந்நிலையில், பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "சந்திரசேகர் ராவின் ஊழலால் தெலங்கானாவில் பெண்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ. 4,000 வரையில் கிடைக்கும்.
அதில் ரூ. 2,500 பெண்களின் வங்கிக்கணக்கில் வழங்கப்படும், கேஸ் சிலிண்டர் மானிய விலையில் ரூ. 500-க்கு வழங்கப்படும். அடுத்ததாக, ரூ. 1,000-க்கு அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.