பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா முழுமையடையவில்லை - ராகுல் காந்தி காட்டம்!
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் ராகுல் கந்தினி பேசியுள்ளார்.
இட ஒதுக்கீடு
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் பேசினார், "மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு நாட்டின் பெண்களுக்கு உதவும் முக்கியமான முடிவு என்பதை எல்லோரும் ஏற்கிறார்கள்.
இந்த மசோதாவில் ஓ.பி.சி ஒதுக்கீட்டையும் இணைக்க வேண்டும். இந்த மசோதாவில் இரு முரண்பட்ட விஷயங்களை பார்க்கிறேன். ஒன்று மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது, மற்றொன்று தொகுதி வரையறை தேவை என்பது"
ராகுல் காந்தி
இதனை தொடர்ந்து, அவர் பேசுகையில், "ஓ.பி.சி பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லாததால் முழுமையற்ற மசோதாவாகவே இருக்கிறது. ஓ.பி.சி பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. என்னுடைய பார்வையில் இன்றே இந்த இடஒதுக்கீட்டை இதை நடைமுறைப்படுத்தலாம். நாட்டின் மக்கள்தொகையில் பெரும் பகுதியினராக இருப்பவர்கள் ஓ.பி.சி பிரிவினர்.
ஆனால், மத்திய அரசின் நிர்வாகத்தில் 90 செயலாளர்கள் இருக்கிறார்கள். அதில் 3 பேர் மட்டுமே ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்தவர்கள். நாடாளுமன்றத்தில் நாட்டின் முதல் குடிமகளான பழங்குடி இன பெண் குடியரசுத் தலைவியை பார்க்க முடியவில்லை.
அதானி உட்பட பிற பிரச்னைகளில் இருந்து எப்படி மக்களவை திசைதிருப்புவது என்பதை பா.ஜ.க-வினர் நன்கு அறிந்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்" என்றார்.