7 மாநில இடைத்தேர்தல்; பாஜக தந்திரம் தகர்ந்துள்ளது - ராகுல் காந்தி

Rahul Gandhi BJP Election
By Karthikraja Jul 14, 2024 05:46 AM GMT
Report

 7 மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல்

நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

by election

இதில் இந்தியா கூட்டணி 10 தொகுதிகளிலும், பாஜக 2 தொகுதிகளிலும், பீகாரின் ரூபாலி தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சங்கர் சிங்கும் வெற்றிபெற்றுள்ளனர்.இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது பாமக தான் - ராமதாஸ்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது பாமக தான் - ராமதாஸ்

ராகுல் காந்தி

இதில் அவர் கூறியதாவது, மக்களிடம் குழப்பம், அச்சத்தை ஏற்படுத்தி வெற்றி பெறும் பாஜகவின் தந்திரம் , 7 மாநில இடைத்தேர்தல் வெற்றி மூலம் தகர்க்கப்பட்டுள்ளது. 13 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வென்றுள்ளது. 

சர்வாதிகாரத்தை ஒழித்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் விருப்பமாக உள்ளது. மக்கள் தங்கள் வாழ்வாதாரம் மேம்படவும், அரசியலமைப்பைக் காக்கவும் இந்தியா கூட்டணியை ஆதரித்துள்ளனர். சர்வாதிகாரத்தை ஒழிக்க விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், மாத ஊதியம் பெறுவோர் வாக்களித்துள்ளனர்.