என் மீது தவறு இல்லை, மன்னிப்பு கேட்க முடியாது - ராகுல் காந்தி பதில்!
ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது, அதற்கு இவர் பதில் அளித்துள்ளார்.
அவதூறு வழக்கு
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக கர்நாடகாவில் நடந்த பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர் "மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள்" என்று பேசியதாக கூறி பாஜகவைச் சேர்ந்த குஜராத் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி குஜராத் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இது குறித்து சூரத் நீதிமன்றத்தில் இவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் இவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
ராகுல் காந்தி பதில்
இந்நிலையில், இந்த வழக்கை எதிர்த்து குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, அதற்குப்பிறகு 2 முறை மேல்முறையீடு செய்தார். அதன்பிறகு குஜராத் உயர்நீதிமன்றம் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட முடியாது என்று தள்ளுபடி செய்தது.
மேலும், இவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார், இதன் வழக்கு நாளை நடக்கவுள்ளது. இந்த நிலையில், "அவதூறு வழக்கில் தான் குற்றவாளி இல்லை. தனது பேச்சில் தவறு இல்லை என்பதால் மன்னிப்பு கோர முடியாது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் முன்னதாகவே செய்திருப்பேன். அதே சமயம் தன் மீது உள்ள தண்டனையை ரத்து செய்ய வேண்டும். நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.