'வன்முறை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல': ராகுல் காந்தி கருத்து

india farmer delhi
By Jon Jan 26, 2021 07:03 PM GMT
Report

வன்முறை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 60 நாள்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் குடியரசு தினமான இன்று டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை காலை முதல் காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி டெல்லி எல்லைகளில் இருந்து விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்து வருகின்றனர்.

சுமார் 500 டிராக்டர்களுடன் தில்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்துள்ள அவர்கள் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். செங்கோட்டையில் உள்ள சிறிய கோபுரத்தில் சீக்கியர்களின் புனிதமான கொடிகளை ஏற்றினர். டெல்லியில் பல்வேறு இடங்களில் நுழைந்த விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடுத்து வருகிறது.

விவசாயிகள் தற்போது டெல்லி செங்கோட்டை பகுதியை அடைந்துள்ளனர். இதுகுறித்து ராகுல் காந்தி டிவிட்டரில் தெரிவித்திருப்பதாவது, வன்முறை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல.

இதில் யாராவது காயமடைந்தால், அது நமது சேதத்திற்கான சேதமாகும். நாட்டின் நலனுக்காக வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெறுங்கள் என்று தெரிவித்துள்ளார்.