மொத்த இந்தியாவும் என் வீடுதான்; ரோட்டு கடையில் தோசை சுட்ட ராகுல் - வைரல் வீடியோ!
ராகுல் காந்தி தோசை சுட்டு தேர்தல் பிரச்சாரம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
ராகுல் காந்தி
தெலுங்கானா, 119 தொகுதிகளுக்கான சட்டசபை பொதுத்தேர்தல் வரும் நவம்பர் 30ம் தேதி நடக்கவுள்ளது. தொடர்ந்து, டிசம்பர் 3ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அங்கு ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி ,
பொதுச்செயலாளர் பிரியங்கா உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஜக்தியால் பகுதியில் பேரணி சென்றபோது பேசிய ராகுல் காந்தி, எனக்கு வீடு தேவையில்லை.
தேர்தல் பிரச்சாரம்
முழு இந்தியாவும் எனது வீடு தான். மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், அசாம் என எங்கு தேர்தலில் போட்டியிட்டாலும், பாஜகவிற்கு உதவுவதற்காக ஏ.ஐ.எம்.ஐ. எம்., கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்துகிறது.
Pure soul with golden heart our Rahul Gandhi ji ?#RahulGandhi #TelanganaAssemblyElections2023 @RahulGandhi @priyankagandhi @INCIndia @INCTelangana @revanth_anumula pic.twitter.com/YWfBNh1YiV
— Danasari Seethakka (@seethakkaMLA) October 20, 2023
பொது மக்களின் ஆட்சி என்று நீங்கள் நினைத்தீர்கள். ஆனால் ஒரு குடும்பம் தெலுங்கானாவில் தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது எனத் தெரிவித்தார்.
மேலும், கரீம்நகரில் சாலையோர கடையில் தோசை சுட்டு ராகுல் பிரசாரம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.