மீண்டும் எம்.பி. ஆனார் ராகுல் காந்தி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி பதவி வழங்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி
2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி எம்.பி பதவி, தீர்ப்பு வந்த மறுநாளே பறிக்கப்பட்டது. ராகுல் காந்தி, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
அதில், அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், அதைத்தொடர்ந்து நிகழ்ந்த அவரது தகுதி நீக்கமும் அவருக்கு மட்டுமின்றி, அவரை தேர்வு செய்த வாக்காளர்களின் உரிமையையும் பாதிக்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
எம்.பி பதவி
ஆனால், அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை. இது தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்றத்தில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. தொடர்ந்து, மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது ராகுல் காந்தியை பேச வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.