ராகுல் காந்திக்கு பயமா? அப்போ இருந்த அவசரம் இப்போ இல்லையே - பாஜகவை விளாசிய ஸ்டாலின்!
ராகுல் காந்தி பாராளுமன்றத்திற்கு வந்துவிடுவார் என பயமா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
எம்.பி பதவி
2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி எம்.பி பதவி, தீர்ப்பு வந்த மறுநாளே பறிக்கப்பட்டது. ராகுல் காந்தி, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
அதில், அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், அதைத்தொடர்ந்து நிகழ்ந்த அவரது தகுதி நீக்கமும் அவருக்கு மட்டுமின்றி, அவரை தேர்வு செய்த வாக்காளர்களின் உரிமையையும் பாதிக்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஸ்டாலின் கேள்வி
ஆனால், அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை. இது தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "ராகுல் காந்தி மீதான தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில்,
Why hasn't Thiru @RahulGandhi been restored as an MP despite the Supreme Court staying his conviction? Why the urgency shown to disqualify him is missing now? Is the BJP afraid of brother #RahulGandhi's presence in Parliament?#RestoreRahulGandhi #INDIA
— M.K.Stalin (@mkstalin) August 6, 2023
அவரது எம்.பி பதவி நீக்கத்தை ஏன் திரும்பப் பெறவில்லை? அவரைத் தகுதி நீக்கம் செய்வதற்குக் காட்டிய அவசரத்தைத் திரும்பப் பெறுவதில் ஏன் காட்டவில்லை. சகோதரர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதை நினைத்து பாஜக அஞ்சுகிறதா" என தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.