24 மணி நேரமும் மோடி அதற்காகத்தான் உழைக்கிறாரு; இனி 'அதானி கீ ஜே' - எகிறிய ராகுல்!

Rahul Gandhi Narendra Modi Gautam Adani
By Sumathi Nov 20, 2023 10:39 AM GMT
Report

அதானிக்காக 24 மணி நேரமும் மோடி உழைக்கிறார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி

ராஜஸ்தான், புந்தி, தெளசா ஆகிய பகுதிகளில் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "பாரத் மாதா கீ ஜே' என்று அடிக்கடி கூறும் பிரதமர் மோடி, 24 மணிநேரமும் அதானிக்காக உழைக்கிறார்.

rahul-gandhi-accused-modi

எனவே, 'அதானி கீ ஜே' என்றுதான் இனி அவர் முழங்க வேண்டும். ஏழை மக்களுக்காக ஒரு தேசம், அதானிக்காக ஒரு தேசம் என இருவேறு இந்தியாவை உருவாக்க பிரதமர் விரும்புகிறார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், முதல் பணியாக நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்படும்.

பெண்களுக்கு மாதம் ரூ. 4000 வழங்கப்படும் - ராகுல் காந்தி வாக்குறுதி!

பெண்களுக்கு மாதம் ரூ. 4000 வழங்கப்படும் - ராகுல் காந்தி வாக்குறுதி!

அதானிக்காக ஒரு தேசம்

அதன் பிறகே, இந்தியத் தாயின் வெற்றி தொடங்கும். ரூ.12,000 கோடி செலவில் விமானம் வாங்க உங்களால் (மோடி) முடிகிறது. ஒரு நாளுக்கு மூன்று முறை உடைகளை மாற்றுவதோடு, ரூ.12 கோடி மதிப்பிலான காரில் பயணிக்க முடிகிறது.

adani issue

ஆனால், ஓபிசி, தலித், பழங்குடியின இளைஞர்கள், தங்களின் உண்மையான எண்ணிக்கையை அறிந்துகொள்ள விரும்பினால், ஜாதியே இல்லை என்று கூறி மறுத்து விடுகிறீர்கள். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது நாட்டுக்கு மிகவும் அவசியம்" எனத் தெரிவித்துள்ளார்.