ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா - ஆசியக்கோப்பைக்கு செல்வாரா?
இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராகுல் டிராவிட்
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே ஆகஸ்ட் 28 ஆசிய உலக கோப்பை தொடருக்கான முதல் போட்டி நடைபெறவுள்ளது. இந்நிலையில் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா உறுதியானதையடுத்து அவர் ஆசிய உலக கோப்பை தொடரில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சமீபத்தில்தான் சிம்பாப்வேவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ராகுல் டிராவிட், போட்டி பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பந்து வீச்சில் பயிற்சியாளர் பராஸ் மம்ப்ரே ஆகியோருக்கு ஓய்வு அளிக்கபட்டிருந்தது.
கொரோனா உறுதி
அப்போட்டியில் விவி.எஸ் லக்ஷ்மண் ராகுல் டிராவிட்டுக்கு பதிலாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. வரும் 28 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் ஆசிய கிரிக்கெட் தொடர் நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக துபாயில் பயிற்சியளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது.
ரோஹித் ஷர்மா தலைமையிலான அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல உள்ளது.
ஆசிய உலக கோப்பை
கோப்பையை தக்க வைக்க கடும் போட்டி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஞ்சிய இடங்களுக்காக ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் சிங்கப்பூர் ஆகிய அணிகள் மோதவுள்ள நிலையில், தகுதிச் சுற்றுகள் முடிந்த பிறகு மூன்றாவது அணி முடிவு செய்யப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ரோஹித் கேப்டனாகவும் ,கே.எல் .ராகுல் துணை கேப்டனாகவும் ,விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராகயிருப்பார்களென்று எதிர்பார்க்கப்படுகிறது.