போட்டியிலிருந்து 'விராட் கோலி' விலகியது ஒருவகையில் நல்லதுதான் - ராகுல் டிராவிட் பேட்டி!
விராட் கோலியின் விலகல் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.
கோலி விலகல்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ஐதராபாத்தில் நாளை தொடங்குகிறது.
இதில், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து நடச்சத்திர வீரர் விராட் கோலி விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்தது.
மேலும், கோலிக்கு பதிலாக ரஜத் பட்டிதார் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விராட் கோலியின் விலகல் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.
டிராவிட் பேட்டி
அவர் கூறுகையில் "விராட் கோலி போன்ற ஒரு தரமான வீரரை இந்திய அணி தற்போது இழந்துள்ளது சற்று பின்னடைவுதான். ஏனெனில் அவர் ஒரு அற்புதமான வீரர் .
ஆனால் அவர் முதல் 2 போட்டிகளில் ஆடாததும் ஒருவகையில் நல்லதுதான். ஏனெனில் அவருக்கு பதிலாக வேறு யாரையாவது அந்த இடத்தில் பயன்படுத்தி அவர்களது செயல்பாட்டை முன்னேற்ற இந்த போட்டிகள் கொஞ்சம் உதவியாக இருக்கும்.
அந்த வகையில் விராட் கோலியின் இடத்தில் மற்றொரு வீரர் விளையாடி அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
விஜய் டிவி புகழ் னாஞ்சில் விஜயன்