சாதிவாரி கணக்கெடுப்பு - நாடுமுழுவதும் நடத்தணும்..ராகுல் வலியுறுத்தல்!!

Indian National Congress Rahul Gandhi India
By Karthick Oct 09, 2023 10:54 AM GMT
Report

பீகார் மாநிலத்தில் எடுக்கப்பட்டுள்ளது போல நாடெங்கிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு

இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சியில் பலதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன எனக் கூறி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவித்தார்.

5 மாநில தேர்தல் - அறிவித்த ஆணையம்!! முழு வீச்சில் இறங்கிய கட்சிகள்!!

5 மாநில தேர்தல் - அறிவித்த ஆணையம்!! முழு வீச்சில் இறங்கிய கட்சிகள்!!

இந்த கணக்கெடுப்பை நடத்துவதற்கான ஆற்றல் பிரதமர் மோடியிடம் இல்லை என குற்றம்சாட்டிய அவர், காங்கிரஸ் கமிட்டி இந்த கணக்கெடுப்பை ஒருமனதாக ஆதரிப்பதாக தெரிவித்தார்.

ragul-supports-caste-based-census-in-india

தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சி செய்யும் 4 மாநிலங்களில் 3-இல் OBC வகுப்பை சேர்ந்தவர்களே முதல்வராக உள்ளனர் என்பதை குறிப்பிட்ட அவர், ஆனால் ஆளும் 10-இல் 1-இல் மட்டுமே OBC வகுப்பை சேர்ந்தவர் முதல்வராக உள்ளார் என சுட்டிக்காட்டினார்.

மேலும், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என கூறிய ராகுல் காந்தி, நாட்டில் எவ்வளவு பழங்குடியின மக்கள் உள்ளனர் என்பது யாரும் தெரியவில்லை என்றார்.