5 மாநில தேர்தல் - அறிவித்த ஆணையம்!! முழு வீச்சில் இறங்கிய கட்சிகள்!!
வரும் நவம்பர் மாதம் 5 மாநில தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
5 மாநில தேர்தல்
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக நடைபெற உள்ள 5 மாநில தேர்தல்கள் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த 5 மாநிலங்களிலும் தேர்தலை எதிர்கொள்வதற்கானப் பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வரும் நிலையில், தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி சத்திகஸ்கர் மாநிலத்தில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, நவம்பர் 7 மற்றும் 17-ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 90 சட்டசபை இடங்கள் உள்ளது, தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் சரண் தாஸ் மகந்த் முதல்வராக உள்ளார்.
அதே போல மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் 230 தொகுதிகளுள்ள நிலையில், தற்போது பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார்
தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது, 119 இடங்களை கொண்ட அம்மாநிலத்தின் தற்போதைய முதல்வராக பாரதீய ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் முதல்வராக உள்ளார்.
மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. அம்மாநிலத்தில் 40 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மிசோ தேசிய முன்னணி கட்சியின் ஜோரம்தங்கா முதல்வராக உள்ளார்.
ராஜஸ்தானில் நவம்பர் 23-ஆம் தேதி நடப்படவுள்ளது. அம்மாநிலத்தில் 200 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் கட்சியின் அசோக் கெல்லட் முதல்வராக உள்ளார்.
வெவ்வேறு தேதிகளில் நடத்தப்படும் தேர்தல் ஒரே நாளாக டிசம்பர் 3-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் விதிகள் அமலுக்கு வருவதாக குறிப்பிட்டு, மொத்தமாக 1.77 லட்ச வாக்கு சாவடிகள் அமைத்து வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.