பணம் இருக்குன்னு சில மூஞ்சிங்க படம் நடிக்க வர்றாங்க - ராதாரவி ஆதங்கம்!
இரவின் நிழல் படத்தின் சக்சஸ் மீட்டில் கலந்துக் கொண்ட நடிகர் ராதாரவி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இரவின் நிழல்
பார்த்திபன் இயக்கி, நடித்த இரவின் நிழல் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை அவர் சிங்கிள் ஷாட்டில் படமாக்கி இருந்தார்.
உலகிலேயே நான் லீனியர் முறையில் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் என பெருமை பெற்றது. இப்படம் வெளியானது முதல் பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை ஏராளமானோர் இப்படத்தை பார்த்து பாராட்டினர்.
சக்சஸ் மீட்
அதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் இரவின் நிழல் திரைப்படத்தை பார்த்து பார்த்திபன், இப்படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என நிரூபித்துவிட்டதாக பாராட்டினார்.
இந்தநிலையில், இரவின் நிழல் படத்தின் சக்சஸ் மீட் அண்மையில் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், அருண் மாதேஸ்வரன், தயாரிப்பாளர்கள் சிவா, தனஞ்செயன் மற்றும் நடிகர் ராதாரவி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ராதா ரவி
இதில் பேசிய நடிகர் ராதா ரவி பார்த்திபனின் முயற்சியை பாராட்டி பேசினார். அப்போது, பார்த்திபன் மூஞ்சிய 2 மணிநேரம் தொடர்ந்து பார்க்க முடியுமா, ஆனா ஒத்த செருப்பு படத்துல பார்க்க வச்சான்ல, அதுதான் திறமை.
இப்போலாம் பணம் இருக்குன்னு சில மூஞ்சிங்க நடிக்க வர்றாங்க. நான் சாபம் விட்டாலே அப்படி ஆகிடுவாங்க போல. விளம்பரத்துல ஆடுறத பார்த்தப்பவே இவன் நடிக்க வந்துருவான்னு சொன்னேன் ஒரு மேடைல. அதே மாதிரியே வந்துட்டான்யா என பேசி உள்ளார்.