நயன்தாராவை தொடர்ந்து தமன்னாவை பார்த்து சர்ச்சையில் சிக்கிய ராதா ரவி!

Nayanthara Tamannaah Only Kollywood Gossip Today
By Sumathi Jul 01, 2022 09:33 PM GMT
Report

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை நயன்தாரா குறித்து ராதா ரவி இழிவாக பேசி சர்ச்சையில் சிக்கி இருந்த நிலையில், தற்போது நடிகை தமன்னா குறித்து பேசி உள்ள பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

ராதாரவி

நடிகரும் பாஜக அரசியல் நிர்வாகியுமான ராதாரவிக்கு இந்த நடிகைகள் மேல என்னத் தான் காண்டுன்னே தெரியலப்பா... எப்போ பாரு ஏதாவது யாரையாவது சொல்லிட்டு போயிடுறாரு. ஏற்கனவே நயந்தாரா, இப்போ தமன்னா.

radha ravi

என்ன பேசி இருக்காரு? ஏது பேசி இருக்காருன்னு விரிவா பாப்போம் வாங்க. தமிழ் சினிமாவுல மூத்த நடிகர்கள ஒருத்தர் ராதாரவி. சினிமாவ தாண்டி அரசியல்லயும் இருந்துட்டு வரவரு அப்போ அப்போ கட்சியை மாத்தி மாத்தி இப்போ பாஜகவுல இணைஞ்சுருக்காரு.

நயன்தாரா

சமீப காலமாவே இவரு பொது வெளிகள சினிமாவ பத்தியும், ஹீரோ, ஹீரோயின்ஸ் பத்தியும் பேசுற பேச்சுகள் பேசு பொருளாகிடுது. உதாரணத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு நயன்தாரா நடிப்புல உருவாகி இருந்த கொலையுதிர் காலம் படத்தோட செய்தியாளர் சந்திப்புல கலந்துகிட்ட ராதாரவி,

nayanthara

முன்பெல்லாம் சாமி வேஷம் போடறதுன்னா கே.ஆர்.விஜயாவைத்தான் தேடுவாங்க. ஆனால், இப்பல்லாம் யாரு வேணும்னாலும் போடலாம் சாமி வேஷம். இப்பல்லாம், கும்பிட்றவங்களும் சாமி வேஷம் போடலாம்,

தமன்னா 

கூப்பிடுறவங்களும் சாமி வேசம் போடலாம் அப்டின்னு பேசியிருந்தது அப்போதைக்கு கோலிவுட் வட்டாரத்துல பரபரப்ப ஏற்படுத்தி இருந்துச்சு. இந்த பேச்சு பேசு பொருளான நிலையில, அப்போதைக்கு திமுகவுல இருந்த ராதாரவி நீக்கப்பட்டாரு.

அதுக்கு அப்புறம் நயன்தாரா கிட்ட வருத்தம் தெரிவிச்சு இருந்தாரு ராதாரவி. கொஞ்ச நாள் அமைதியா இருந்தவரு, கடந்த 28-ம் தேதி கனல் படத்தோட இசை வெளியீட்டு விழாவுல கலந்துகிட்டாரு.

சினிமா விமர்சகர்கள் 

அப்போ கனல் பட நடிகையை புகழுரேங்குற பேருல, தமன்னா உடம்புல கொஞ்சம் கூட கருப்பே இல்லை, சுத்தி சுத்தி நானும் பாத்துட்டேன் கொஞ்சம் கூட கருப்பே இல்லை, அதே மாதிரி தான் கனல் பட ஹீரோயினும் செகப்பா அழகா இருக்காரு,

கிளாமராத்தான் நடிக்கப் போறாருன்னு நினைச்சேன் ஆனா படத்த பார்த்ததும் நடிப்புலையும் அசத்தி இருக்குறதா ராதாரவி சொல்லி இருந்தாரு. இந்தப் பேச்சு ஒரு பக்கம் இருக்க, கனல் படத்த இயக்கி இருக்குறது, ஒரு IRS ஆபிசர் சமயம் முரளி.

அவரையும் விட்டு வைக்கல்ல. அவரோட பட விழாவுக்கு போயிட்டே அவரையே திட்டி தீட்டிட்டாரு ராதாரவி. ஒரு மூத்த நடிகர், சீனியர், அனுபவம் வாய்ந்தவர் இப்படி பொது வெளியில ஒரு நடிகர பத்தியும்,

சினிமாகாரர்கள பத்தியும் இப்படி நாகரீகமற்ற முறையில பேசுறது சரியில்லன்னு, சினிமா விமர்சகர்கள் சொல்றாங்க.

மகனின் முன்னாள் காதலி...திருமணம் செய்து கொண்ட 51வயது தந்தை!