சுரேஷ் ரெய்னாவுக்கு பதில் இவரா? இதுதான் காரணம் - போட்டுடைத்த சிஎஸ்கே நிர்வாகி!
சுரேஷ் ரெய்னாவுக்கு பதில் ரச்சின் ரவீந்திராவை ஏலத்தில் வாங்கியதாக அணியின் நிர்வாகி கூறியுள்ளார்.
சுரேஷ் ரெய்னா
சிஎஸ்கே அணியின் ஜாம்பாவன் வீரர்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா. எம்எஸ் தோனியின் நம்பிக்கை வீரராக அணியில் இடம் பிடித்திருந்தவர். இதன் காரணத்தினாலேயே இவரை ரசிகர்கள் சின்ன தல என்று அழைத்து வருகின்றனர்.
2022 ல் நடைபெற்ற மெகா ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை சென்னை அணிகைவிட்டது. சென்னை அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத்தந்த இவரை அணி எடுக்க்காதது மிகவும் ஆச்சரியத்துகுள்ளாகியது. வேறு எந்த அணியும் அவரை எடுக்கவில்லை.
ரச்சின் ரவீந்திரா
இவருக்கு பதில் அணியில் மொயின் அலி மற்றும் ராபின் உத்தப்பா விளையாடினார்கள். இந்நிலையில் தற்போது நடந்த மினி ஏலத்தில் ரச்சின் ரவீந்திராவை 1.8 கோடிக்கு சிஎஸ்கே அணி வாங்கியது. இவர் மொயின் அலியின் பேக் அப் வீரராக இருப்பார் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில்,
சென்னை அணியின் நிர்வாகி காசி விஸ்வநாதன், சுரேஷ் ரெய்னாவுக்கு பதில்தான் இவரை வாங்கினோம். ஐபிஎல் தொடருக்கு முன் நடக்கும் டி20 களில் ரவீந்திராவின் விளையாட்டை பொறுத்தே அவர் பிளேயிங் லெவனில் வாய்ப்பு குறித்து அறிவிக்கப்படும்.
அதைபோன்றே பயிற்சியாளர் பிளேமிங் அவரை பேக் அப் வீரராக தான் பார்க்கிறார். நிச்சயம் அவர் திறமையான வீரர் என்பதில் மாற்று கருத்து இல்லை என்று தெரிவித்துள்ளார்.