உக்ரைன் போரை நிறுத்த முடிவு? டிரம்ப் உடன் பேச எந்த நிபந்தனையும் இல்லை - மனம் மாறிய புதின்!
உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப் உடன் அதிபர் புதின் பேசத் தயாராக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வேட்பாளராகக் களமிறங்கி வெற்றி பெற்றார்.
முன்னதாக 2016 - 2020 வரை அதிபராக இருந்த டிரம்ப்சர்வதேச அரசியல் சூழலில் இணக்கத்தைப் பேணி வந்தார்.இந்த நிலையில் வரும் ஜனவரி மாதத்தில் அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் பதவியேற்க உள்ளார். இவர் அமெரிக்காவின் 47 வது அதிபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
அதிபர் புதின்
மேலும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொடர்புகொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ரஷிய அதிபர் புதனுடனும் தொலைப்பேசி வாயிலாக உரையாடினார்.
அப்போது டிரம்ப்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும் உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப் உடன் பேசத் தயாராக உள்ளதாக அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.இது குறித்து, உக்ரைன் உடனான போர் நிறுத்தம் குறித்து உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.