மருந்து கடைக்கு போன இடத்துல எவளோ பெரிய லக்..!! கோடிகளை அள்ளிய விவசாயி!!

Lottery Punjab
By Karthick Nov 08, 2023 10:10 AM GMT
Report

கடைக்கு மருந்து வாங்க சென்றவருக்கு லாட்டரியில் 2.5 கோடி ரூபாய் பணம் ஜாக்பாட் அடித்துள்ள செய்தி விவசாயிக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்துள்ளது.

லாட்டரி

பணம் சம்பாதிப்பது என்பது பெரும் கடினமான விஷயமாக கூறப்பட்டு வருகின்றது. அது சிலருக்கு எளிதான விஷயமாக இருந்தாலும், பலருக்கும் வாழ்க்கை பணத்தை சம்பாதிப்பதிலேயே முடிந்து விடுகிறது.

ஆனால், இதனை எல்லாம் மீறி சிலருக்கு லாட்டரியில் ஜாக்பாட் அடித்த கதைகளும் நாம் கேட்டது உண்டு. அப்படி ஒரு கதை தான் நாம் தற்போது காணப்போகிறோம்.

punjab-former-wins-2-5-crores-in-lottery

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரைச் சேர்ந்த வயதான விவசாயி ஷீத்தல் சிங். நகரின் மஹில்பூரில் வசித்து வரும் இவர் குடும்ப உறுப்பினருக்கு மருந்து வாங்குவதற்காக ஒரு மருத்துவக் கடைக்குச் சென்றுள்ளார். உரைத்து போன விவசாயி கடைக்குச் சென்று மருந்து வாங்கிய பிறகு இவர் அந்த கடையில் இருந்த லாட்டரி சீட் ஒன்றையும் வாங்கி இருக்கின்றார்.


லாட்டரி மற்றும் மருந்தை வாங்கி கொண்டு வீட்டிற்க் திரும்பிய இவர்க்கு சுமார் நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, கடையின் உரிமையாளரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அப்போது தான் அந்த அதிர்ச்சி செய்தி விவசாயிக்கு கிடைத்துள்ளது. லாட்டரியில் தனக்கு சுமார் 2.5 கோடி ரூபாய் விழுந்துள்ளதாக கடையின் உரிமையாளர் தெரிவிக்க, செய்தி கேட்டு விவசாயி ஷீத்தல் சிங் ஆனந்தத்தில் செய்வதறியாது திகைத்துள்ளார்.

punjab-former-wins-2-5-crores-in-lottery

திருமணமான இரண்டு மகன்கள் உள்ள இவர், இந்த இன்ப செய்தியை தனது குடும்பத்தினருக்கு கூறி மகிழ்ச்சியை பகிர்நது கொண்டுள்ளார்.