கதறிய மக்கள்; கண்ணீர்விட்ட முதலமைச்சர் - கல்வி நிறுவனங்கள் மூடல்!

Punjab Education Flood
By Sumathi Sep 04, 2025 12:51 PM GMT
Report

கல்வி நிறு​வனங்​களுக்கு செப்​டம்​பர் 7-ம் தேதி வரை விடு​முறை அறி​வித்து உத்​தர​விடப்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்பு

பஞ்​சாப் முழு​வதும் வெள்​ளத்​தில் சிக்கி இது​வரை 30 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 3.50 லட்​சத்​துக்​கும் அதிகமானோர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

punjab mann

நெடுஞ்​சாலைகளில் பாறை​கள் உருண்டு விழுந்து போக்​கு​வரத்​தும் துண்​டிக்​கப்​பட்​டுள்​ளது. மேகவெடிப்​பைத் தொடர்ந்து மிக குறுகிய காலத்​தில் அதிக மழைப்​பொழிவு ஏற்​பட்​டதையடுத்து சட்​லஜ், பியாஸ் மற்​றும் ராவி ஆறுகள் மற்​றும் பரு​வ​கால ஓடைகளில் வெள்​ளம் பெருக்​கெடுத்து ஓடு​கிறது.

இந்நிலையில் மக்களின் துயர நிலை கண்டு அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் வைரலாகி வருகிறது.

செல்பி மோகத்தால் அதிக மரணம் - இந்தியாதான் முதலிடம்!

செல்பி மோகத்தால் அதிக மரணம் - இந்தியாதான் முதலிடம்!

கல்வி நிறுவனங்கள் மூடல்

தொடர்ந்து கல்​வித் துறை அமைச்​சர் ஹர்​ஜோத் சிங் பெய்ன்ஸ், “ மாநிலத்​தின் வெள்ள நிலை​மையை கருத்​தில் கொண்டு முதல்​வர் பகவந்த் சிங் மான் அறி​வுறுத்​தலின்​படி பஞ்​சாப் முழு​வதும் உள்ள அனைத்து அரசு உதவி பெறும்,

punjab flood

அங்​கீகரிக்​கப்​பட்ட மற்​றும் தனி​யார் பள்​ளி​கள், கல்​லூரி​கள், பல்​கலைக்​கழகங்​கள், பாலிடெக்​னிக் கல்​லூரி​கள் செப்​டம்​பர் 7 வரை மூடப்​படு​கிறது. உள்​ளூர் நிர்​வாகத்​தின் வழி​காட்​டு​தலை அனை​வரும் கண்​டிப்​பாக பின்​பற்ற வேண்​டும் என கேட்​டுக்​கொள்​ளப்​படு​கிறார்​கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.