கதறிய மக்கள்; கண்ணீர்விட்ட முதலமைச்சர் - கல்வி நிறுவனங்கள் மூடல்!
கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 7-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
வெள்ள பாதிப்பு
பஞ்சாப் முழுவதும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். 3.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெடுஞ்சாலைகளில் பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேகவெடிப்பைத் தொடர்ந்து மிக குறுகிய காலத்தில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டதையடுத்து சட்லஜ், பியாஸ் மற்றும் ராவி ஆறுகள் மற்றும் பருவகால ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் மக்களின் துயர நிலை கண்டு அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் வைரலாகி வருகிறது.
கல்வி நிறுவனங்கள் மூடல்
தொடர்ந்து கல்வித் துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ், “ மாநிலத்தின் வெள்ள நிலைமையை கருத்தில் கொண்டு முதல்வர் பகவந்த் சிங் மான் அறிவுறுத்தலின்படி பஞ்சாப் முழுவதும் உள்ள அனைத்து அரசு உதவி பெறும்,
அங்கீகரிக்கப்பட்ட மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகள் செப்டம்பர் 7 வரை மூடப்படுகிறது. உள்ளூர் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.