தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார் - திரையுலகினர் இரங்கல்

Tamil Cinema
By Sumathi Sep 09, 2024 01:31 PM GMT
Report

முன்னணி தயாரிப்பாளரான டில்லி பாபு காலமானார்.

டில்லி பாபு

முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி. இதன் நிறுவனர் ஜி.டில்லி பாபு. கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்து வந்தார்.

dilli babu

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவருடைய மறைவு திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்வர்யாராய் உடன் விவாகரத்தா? மவுனம் கலைத்த அபிஷேக் பச்சன்

ஐஸ்வர்யாராய் உடன் விவாகரத்தா? மவுனம் கலைத்த அபிஷேக் பச்சன்

 திரையுலகினர் அஞ்சலி

தொடர்ந்து பலரும் இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ‘உறுமீன்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர்.

தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார் - திரையுலகினர் இரங்கல் | Producer Dilli Babu Passed Away

தொடர்ந்து மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர், மிரள் மற்றும் கள்வன் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

இதில் மரகத நாணயம், ராட்சசன், ஓ மை கடவுளே மற்றும் பேச்சிலர் ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.