முரளி பையனுக்கு மகளை கட்டிக்கொடுக்க பயந்தேன் - போட்டுடைத்த தயாரிப்பாளர்!

Murali Tamil Cinema
By Sumathi Jul 01, 2024 05:30 PM GMT
Report

நடிகர் முரளியின் மகனுக்கு, மகளை திருமணம் செய்துவைத்தது குறித்து தயாரிப்பாளர் பகிர்ந்துள்ளார்.

நடிகர் முரளி

தமிழ் சினிமாவில் 80,90களில் நடித்த முன்னணி நடிகர்களுள் ஒருவர் முரளி. இவர் நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

murali with sons

2010ஆம் ஆண்டு யாரும் நினைத்துப் பார்க்காத அளவில் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் இழப்பு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. முரளி ஷோபா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அதர்வா, ஆகாஷ் என்ற இரு மகன்களும். காவியா என்ற மகளும் உள்ளனர். இதில் அதர்வா நடிகராக வலம் வருவது நாம் அறிந்ததுதான். ஆகாஷ் முரளி விஜய்யின் உறவினரும் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ மகளை திருமணம் செய்து கொண்டார்.

வாழ்க்கை சீரழிந்ததற்கு இதுதான் காரணம் - அங்காடிதெரு ஹீரோவின் பரிதாப நிலை!

வாழ்க்கை சீரழிந்ததற்கு இதுதான் காரணம் - அங்காடிதெரு ஹீரோவின் பரிதாப நிலை!

தயாரிப்பாளர் பெருமிதம்

தற்போது தன்னுடைய மாமனார் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் ஹீரோவாக நேசிப்பாயா படத்தில் அறிமுகமாகியுள்ளார். சமீபத்தில் அப்படத்தின் போஸ்டரை நடிகை நயன்தாரா அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ,

aakash murali wedding

முரளியின் பையனுக்கு என் மகனை கொடுக்க மிகவும் பயந்தேன். முதல் நாள் அவர்கள் வீட்டிற்கு சென்ற போது ஒருவிதமான பயத்தோடு சென்றேன். வீட்டிற்கு சென்றபோது அவர்கள் நடந்து கொண்ட விதம்,

பாசம் போன்றவற்றை பார்த்து என் மனைவியிடம் இவர்கள் நம் மகள் சினேகாவை நன்றாக பார்த்துக்கொள்வார்கள். அதற்கு காரணம் அவர்கள் அன்பானவர்களாக இருக்கிறார்கள் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.