தொகுப்பாளினி பிரியங்காவிற்கு விவாகரத்தா? ஷாக்கான ரசிகர்கள்
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளியாக வலம் வந்தவர் தான் ப்ரியங்கா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இதனையடுத்து, ‘பிக்பாஸ் சீசன் 5’ கலந்து கொண்ட ப்ரியங்காவிற்கு இந்நிகழ்ச்சி மூலம் இன்னும் ரசிகர் பட்டாளம் கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இவர் சென்றதால், விஜய் டிவியில் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்’ நிகழ்ச்சியை மாகாபாவும், மைனா நந்தினி தொகுத்து வழங்கி வந்தனர். ‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் ப்ரியங்கா ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்’ நிகழ்ச்சிக்கு மறுபடியும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
கமலிடம் ஆசீர்வாதம்
சமீபத்தில், சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். அப்போது, ப்ரியங்கா மேடையில் இருந்த நடிகர் கமலிடம் சென்று அருகில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது ப்ரியங்கா மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, அம்மா... ஹாய்... என்று கூச்சல் போட்டார். அப்போது மா.க.பா கலாய்க்க, என்னிடம் ஏற்கெனவே, கமல் சாரும்.. நானும் அமர்ந்து இருப்பது போல் புகைப்படம் ஒன்று உள்ளது. இப்போது மறுபடியும் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன் என்று கூறி கமல் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.
காதல் திருமணம்
விஜய் டிவியில் டெக்டினியனாக பணியாற்றி வந்த பிரவீன் குமார் என்பவரை கடந்த 2016ம் ஆண்டு ப்ரியங்கா காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் ஒரு சில இடங்களில் மட்டும்தான் அடையாளப்படுத்தினார் பிரியங்கா.
விவாகரத்து சர்ச்சை
அதன் பிறகு அவரைப் பற்றி எங்கேயும் ப்ரியங்கா வெளிப்படுத்தியது கிடையாது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் எங்கேயும், அவருடைய கணவரை குறித்து பேசவில்லை. சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியின் சிறந்த தொகுப்பாளினி விருதினை கைப்பற்றியதுடன் போட்டோஷூட் பக்கம் முழுவதுமாக திரும்பியுள்ளா ப்ரியங்கா.
முற்றிலுமாக பிரியங்கா கணவரை பிரிந்து விட்டார் என்ற வதந்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அம்மாவுடன் வசித்து வரும் பிரியங்கா தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி வெளிப்படையாக பேச மறுத்து வருகிறார்.
இதனால், ரசிகர்கள் கேள்விக்கு மேல் கேள்வியாக அவரிடம் கேட்டு வருகின்றனர். ஆனால், ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ப்ரியங்கா தெளிவாக பதில் சொல்ல மறுத்து வருகிறார்.
ரசிகர் கேள்வி
இந்நிலையில், ரசிகர் ஒருவர், திருமணமான பிறகும் எப்படி எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறீர்கள் என்று ப்ரியங்காவிடம் கேட்டுள்ளார்.
அதற்கு ப்ரியங்கா, உங்களைப் புரிந்துகொள்ளும் கணவர் இருந்தால், அவருக்கு நீங்கள் விசுவாசமாக இருந்தால் எல்லாம் சாத்தியமாகும் என்று பதிலளித்துள்ளார். இதனால், ப்ரியங்கா அவரது கணவரை விவாகரத்து செய்து விட்டாரா என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.