ஷாக்.. திடீரென இரண்டு துண்டாக உடைந்த ஜெட் விமானம் - 8 பேர் காயம்!
விமான நிலையத்தில் உள்ள ஜெட் விமானம் திடீரென இரண்டு துண்டாக உடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து
மும்பை விமான நிலையத்தில், மழை காரணமாக ஒரு சிறிய ரக விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் 8 பேர் பயணித்து வந்தனர், அவர்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நல்லவேளையாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த விபத்து நேற்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. மேலும், இந்த ஜெட் விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான லியர்ஜெட் 45 விமானம் VT-DBL, விசாகப்பட்டினத்தில் இருந்து மும்பை வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கனமழை
இந்நிலையில், விமானத்தில் ஆறு பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் இருந்ததாகவும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்றபோது கனமழை பெய்ததாகவும், அந்த சமயத்தில் பார்வை தூரம் 700 மீட்டர் அளவிலேயே இருந்ததாகவும் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.