முதியவருக்கு எய்ட்ஸ்... தவறாக தெரிவித்த தனியார் மருத்துவமனை - நீதிமன்றம் அதிரடி!

Tamil nadu Coimbatore
By Vinothini Aug 02, 2023 05:19 AM GMT
Report

தனியார் மருத்துவமனையில் முதியவர் ஒருவருக்கு எய்ட்ஸ் உள்ளதாக தவறான தகவல் அளித்துள்ளனர்.

கண் மருத்துவமனை

கோவை மாவட்டம், பீளமேடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருக்கு தற்பொழுது 71 வயதாகிய நிலையில் கடந்த 2017ல் டிசம்பர் மாதம் கோவையில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர்.

private-hospital-given-false-information

அதற்காக ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர். இதன் முடிவில் அவருக்கு எய்ட்ஸ் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மற்றொரு தனியார் மருத்துவமனையிலும் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்துள்ளார். இதில் அவருக்கு எய்ட்ஸ் நோய் எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்.

நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் தனியார் மருத்துவமனை மீது வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விரைவான விசாரணைக்காக கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

private-hospital-given-false-information

மேலும், இது குறித்து நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீது தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி கவனக்குறைவுடன் செயல்பட்ட தனியார் மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்திரவிட்டார். இந்த அபராத தொகையை 4 வார காலத்திற்குள் வழக்கு தொடர்ந்த கிருஷ்ணசாமிக்கு வழங்க வேண்டுமெனவும் உத்திரவிட்டுள்ளார்.