நடுரோட்டில் எரிந்த பேருந்து; உடல் கருகி பலி - மொத்த பயணிகள் நிலை?

Accident Death Theni
By Sumathi Oct 07, 2024 07:13 AM GMT
Report

தனியார் பேருந்து மீது டூவிலர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தீக்கிரையான பேருந்து

தேனி, வீரபாண்டி அருகே உப்புக்கோட்டை விலக்கு புறவழிச்சாலை பகுதியில் தேனியில் இருந்து கம்பம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது டூவிலர் மோதி விபத்துக்குள்ளானது.

எரிந்த பேருந்து

இதில் பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கிய டூவிலர் சிறிது தூரம் இழுத்துச் சென்றதில் உராய்வு ஏற்பட்டு பேருந்தின் முன்பகுதியில் தீப்பற்றி எரிந்தது. உடனே, டிரைவர் மிகவும் சிரமப்பட்டு பேருந்தை நிறுத்தியுள்ளார்.

27வது மாடியிலிருந்து விழுந்த 3 வயது குழந்தை..கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த கொடூரம்!

27வது மாடியிலிருந்து விழுந்த 3 வயது குழந்தை..கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த கொடூரம்!

ஒருவர் பலி

பயணிகள் 50 பேர் அலறியடித்துக் கொண்டு பின்பக்கமாக கீழே இறங்கி ஓடியுள்ளனர். இதற்கிடையில் தீ மளமளவென பரவி பேருந்து முழுவதும் பற்றியெரிந்துள்ளது.

theni

இதில் டூவிலரில் வந்த தேனியைச் சேர்ந்த அரசாங்கம்(50) என்பவர் உடல் கருகி பலியானார். இதனால் அந்த புறவழிச்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

தற்போது இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.