பொண்னு பார்க்க வந்தபோ செருப்பு கூட இல்லாம..எங்க ஹனிமூனே ஷூட்டிங்லதான் - மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த்

Vijayakanth
By Sumathi Aug 26, 2023 04:32 AM GMT
Report

திருமணம் குறித்து பிரேமலதா விஜயகாந்த் மனம் திறந்துள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் ஆகியோருக்குப் பிறகு மார்க்கெட்டை தக்க வைத்தவர் நடிகர் விஜயகாந்த். வசூலிலும் அவரது படங்கள் சாதனை படைத்தது. தொடர்ந்து, 2005ல் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை நிறுவினார்.

பொண்னு பார்க்க வந்தபோ செருப்பு கூட இல்லாம..எங்க ஹனிமூனே ஷூட்டிங்லதான் - மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த் | Premalatha Vijayakanth Shares About Marriage

தமிழகத்தில் முக்கிய கட்சியாக தேமுதிக திகழ்ந்த நிலையில், அவரின் உடல்நிலை பாதிக்கப்படவே தேர்தல் அரசியலில் கட்சி பின்தங்கியது. இந்நிலையில். முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் பிரபல சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,

சுவாரஸ்ய தகவல்

என்னை பெண் பார்க்க வரும் போதுதான் நான் முதல் தடவை கேப்டனை பார்த்தேன். காவி வேஷ்டி கட்டி, மாலை போட்டு கால்ல செருப்பு கூட இல்லாம இறங்கி வந்தாரு. எங்கம்மா எல்லாருமே எவ்வளவு பெரிய ஹீரோ நம்ம வீட்டுக்கு வராரு. அவரை பயங்கரமா வரவேற்கணும் எதிர்பார்த்து நிக்கும் போது, அவர் இறங்கி வந்த விதம் இருக்கே.

பொண்னு பார்க்க வந்தபோ செருப்பு கூட இல்லாம..எங்க ஹனிமூனே ஷூட்டிங்லதான் - மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த் | Premalatha Vijayakanth Shares About Marriage

அவர் ஒரு ஹீரோ மாதிரியே இல்ல. 5 செகண்ட்ல அங்க இருந்த எல்லாருக்கும் அவரை பிடிச்சுட்டு. அப்போக் கூட அவரு நான் சபரிமலைக்கு மாலை போட்டுருக்கேன். இப்போ போய் பொண்ணு பாக்கலாமா கூட கேட்டுருக்காரு. அப்போ கேப்டனுக்கு தொடர்ந்து ஷூட்டிங் இருக்கும்.

எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு மூணு நாள்தான் அவருக்கு ரெஸ்ட். எங்களோட ஹனிமூன் ஊட்டிதான். அதுக்கூட ஷூட்டிங்காக போனதுதான். கேப்டன் வெளியில ஒருமாதிரி வீட்டுல ஒருமாதிரி கிடையாது.

அவருக்கு வீட்டுக்கு யார் வந்தாலும் எல்லாருக்கும் சாப்பாடு போடணும். ரொம்ப எளிமையா இருப்பாரு. எல்லார்கிட்டயும் அன்பா பழகுவாரு என பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.