இதுக்கு ஒரு End இல்லயா.. படமெடுக்கும் பாம்புடன் ஃபோட்டோஷூட் எடுத்த ஜோடி!
வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்ட தம்பதியின் ஃபோட்டோஷூட் வைரலாகி வருகிறது.
ஃபோட்டோஷூட்
ப்ரீ வெட்டிங் ஷூட் இப்போது ஒவ்வொரு திருமணத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன்படி, தற்போது மணமகன், மணமகள் மற்றும் பாம்பை வைத்து இந்த புகைப்படக் கதையை உருவாக்கியுள்ளனர்.
அந்தப் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. முதலில், ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில் பெண் சாதாரணமாக உலா வருவதை காணலாம்.
வைரல் ஃபோட்டோஸ்
அங்கு அவள் ஒரு பாம்பை பார்க்கிறாள். பாம்பை பார்த்த அவள் பாம்பு மீட்பவரை உதவிக்கு அழைக்கிறாள். அப்போதுதான் அவள் அந்த ஆணைச் சந்திக்கிறாள்.
முதலில் பாம்பை பிடித்த அவர், பிறகு அந்த பெண்ணைக் கவர்கிறான்.
இவ்வாறு ஒரு ஸ்டோரி சொல்லும் விதமாக அந்த ஃபோட்டோஸ் அமைந்துள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் கமெண்டுகளை அள்ளி தெறித்து வருகின்றனர்.