மேடையில் யோசிக்காமல் பேசிய பிரசன்னா! சட்டென அழுத சினேகா

Prasanna Sneha
By Karthick Jun 24, 2024 07:05 AM GMT
Report

தமிழ் நட்சத்திர ஜோடிகளின் முக்கியான இடத்தில் இருப்பவர்கள் பிரசன்னா - சினேகா.

பிரசன்னா - சினேகா

புன்னகை அரசி என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் நடிகை சினேகா, சினிமாவில் பிஸியாக நடித்து கொண்டிருந்த போதே, தன்னுடன் நாயகனாக நடித்த பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Sneha prasanna

தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளில் முக்கிய இடத்தில் இருக்கும் இவர்கள் இன்றைய தம்பதிகளுக்கு couples goal'ஆக வாழ்ந்து வருகிறார்கள்.

அழவைத்த பிரசன்னா

திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வரும் சினேகா தற்போது விஜய்யின் G.O.A.T படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.

Sneha prasanna

அதே நேரத்தில் சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார் சினேகா. அப்படி ஒரு நிகழ்ச்சியில் அவர் நடுவராக இருந்த போது, சிறப்பு விருந்தினராக வந்த பிரசன்னா சொன்ன வார்த்தைகள் சினேகாவை கண்கலங்க வைத்துள்ளது.

பட வாய்ப்பிற்காக நைட் பார்ட்டி - சினேகாவின் மற்றொரு பக்கம் - அதிரவைத்த பிரபலம்

பட வாய்ப்பிற்காக நைட் பார்ட்டி - சினேகாவின் மற்றொரு பக்கம் - அதிரவைத்த பிரபலம்

தனியார் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியில், நடுவர்களாக இருந்த பிரசன்னா - சினேகா அந்த நிகழ்ச்சியில் வயதான கேட் அப்பில் நடனமாடினார்.

Sneha prasanna

நடனமாடி முடித்த பிறகு மேடையில் பேசிய பிரசன்னா, வயதாகும் போதும் இப்படித்தான் நான் சினேகாவுடன் இணைந்திருக்க வேண்டும் என்று பேசினார். இதனை கேட்ட சினேகா, சட்டென மேடையிலேயே கண்கலங்கி அழுதார்.